தெலுங்கு நடிகர் ராணா, தமிழில் ‘ஆரம்பம்’ படத்தில் அஜித்துக்கு நண்பராக நடித்திருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, தமிழில் உருவாகும் ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ராணா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராணாவை சமீபத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து கதையை பற்றி அவரிடம் கௌதம் மேனன் விளக்கியதாகவும், ராணாவின் சிறப்புத் தோற்றம் இந்த படத்திற்கு பக்கபலமாக அமையும் என கூறவே, அவர் உடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கௌதம் மேனனுடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
இந்நிலையில், தற்போது சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ராணா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராணாவை சமீபத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து கதையை பற்றி அவரிடம் கௌதம் மேனன் விளக்கியதாகவும், ராணாவின் சிறப்புத் தோற்றம் இந்த படத்திற்கு பக்கபலமாக அமையும் என கூறவே, அவர் உடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கௌதம் மேனனுடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
0 comments:
கருத்துரையிடுக