Latest News
செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தெலுங்கு நடிகரின் உயிரை பலிவாங்கிய நேபாள் நிலநடுக்கம்

நேபாள் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பறித்திருக்கிறது. இந்த துயர சம்பவத்தில் தெலுங்கின் முன்னணி துணை நடிகர்களில் ஒருவரான விஜய்யும் ரத்த சாட்சியாகியிருக்கிறார்.
 
25 வயதான விஜய், எடாகாரம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நேபாள் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பி கொண்டிருந்த போது, திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விஜய் பலியானதாக இசையமைப்பாளர் கிஷன் கூறியுள்ளார். இவ்விபத்தில் அவருடன் சென்ற மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாப்பட்லாவை சேர்ந்த விஜய், துணை நடிகராக நடிப்பதுடன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது உடலை விரைவாக மீட்டுத்தருமாறு தெலுங்கு திரையுலகத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
மனோஜ் நந்தம் மற்றம் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் எடாகாரம் திரைப்படத்தில், தினேஷின் நண்பராக விஜய் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: தெலுங்கு நடிகரின் உயிரை பலிவாங்கிய நேபாள் நிலநடுக்கம் Rating: 5 Reviewed By: Unknown