விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் ஆந்திரா பகுதியில் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி என்ற சுற்றுலா தளத்திற்கு செல்கிறது.
அதிரப்பள்ளி ‘இந்தியாவின் நயாகரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுற்றுலாத்தளமாகும். இது அடர்ந்த காடுகளும், அழகான இயற்கை வளங்களும் நிறைந்த பகுதியாகும்.
இங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ‘புலி’ படத்தின் முக்கிய சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளனர். ஆபத்தான இடங்களில் டூப் எதுவுமின்றி இந்த சண்டை காட்சிகளில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக