தேசிய பிரச்சனையை கையிலெடுத்து ஒரே படத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை திரையிடும் தேசிய விற்பனையை ரோஜாவில் தொடங்கியவர் மணிரத்னம். இந்த பரந்த சந்தைக்கு ஆசைப்பட்டு அவர் எடுத்த படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்மீதான எதிர்பார்ப்பை நீர்க்கச் செய்தன.
அந்த சறுக்கல்களிலிருந்து மீள அவர் எடுத்த காதல் படம்தான், அலைபாயுதே.
அலைபாயுதேக்குப் பிறகு மீண்டும் சறுக்கல். அதிலிருந்து மீண்டுவர மறுபடியும் அலைபாயுதே போன்று ஒரு காதல் படம், ஓகே கண்மணி.
துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ஓகே கண்மணி இறுதிகட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்து மணிரத்னம் தனுஷை இயக்கப் போவதாக தகவல். ராஞ்சனா, ஷமிதாப் படங்களால் இந்தியா முழுக்க தெரியும் நடிகராகியிருக்கிறார் தனுஷ். தனது தேசிய வியாபாரத்துக்கு தனுஷ் நல்ல முதலீடாக இருப்பார் என மணிரத்னம் நினைப்பதில் வியப்பில்லை.
ஆனால், இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படாமலே உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக