சீரகம் கொதித்த நீரை அருந்து, சீராகும் உன் உடம்பு! எப்படி என்று தானே கேட்கி றீர்கள். இதோ
வழிகளை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். படித்து பயனுறுங்கள்.
சீரகம் கொதிக்க வைத்த நீரை அடிக்கடி இளம் சூட்டில் பருகி வந்தால், பசி மந்தம், மற்றும் அஜீரணம் நீங்கி, பசி ஏற்பட்டு ஜீரணம் சீராகும்.
மேலும் பெருத்த உடல் மெலிய இந்த சீரகத் தண்ணீரை இளம் சூட்டுடன் உணவிற்கு பத்து நிமிடத்திற்கு முன்பும், உணவு உண்டு பத்து நிமிடத்திற்கு பின்பும் அருந்த, உணவு நன்கு ஜீரணமாகி, கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும்.
அது மட்டுமா? இந்த கோடை வெயிலிலால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், நீர்கட்டு, நீர்கருக்கு போன்றவற்றிற்கு சீரக தண்ணீரை அருந்த, விரைவில் நிவாரணம் உண்டாகும்.
0 comments:
கருத்துரையிடுக